க.எண்: 2022070318
நாள்: 20.07.2022
அறிவிப்பு:
சரக்கு மற்றும் சேவை வரி, மின் கட்டணம், சொத்துவரி, எரிபொருட்கள் மற்றும் எரிகாற்று உருளை விலை உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறிய இந்திய ஒன்றிய அரசையும், தமிழ்நாடு அரசையும் கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பாக 23-07-2022 சனிக்கிழமையன்று காலை 10 மணியளவில் திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் (ஓ.டி. – பழைய நகரம்), உழவர் சந்தை அருகில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இடம்: அம்பத்தூர் (ஓ.டி. – பழைய நகரம்), உழவர் சந்தை அருகில், திருவள்ளூர் மாவட்டம் நாள்: 23.07.2022 சனிக்கிழமை
கண்டனப் பேருரை: செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் |
இம்மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில, மண்டல (நாடாளுமன்ற), மாவட்ட, தொகுதி, நகரம், வட்டம், பகுதி, ஒன்றியம் உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
- தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி