க.எண்: 2022060270
நாள்: 16.06.2022
அறிவிப்பு:
வருகின்ற சூன் 19, 2022, ஞாயிற்றுக்கிழமையன்று, பனங்காடு அறக்கட்டளை மற்றும் நியூஸ் 7 அக்ரி இணைந்து நடத்தும் பனைக் கனவு திருவிழாவில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்
செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்கவிருக்கின்றார்.
நிகழ்வு விவரம்:
இடம்: பனங்காடு, நரசிங்கனூர் கிராமம், வேம்பி அஞ்சல்,
விக்கிரவாண்டி, விழுப்புரம் மாவட்டம்.
நேரம்: பிற்பகல் 12 மணியளவில்.
இந்நிகழ்வில் விழுப்புரம் மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சார்ந்த கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
- தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு