அறிவிப்பு: தமிழ்த்தேசியப் போராளி வா.கடல்தீபன் நினைவுப் படத்திறப்பு விழா கடலூர் – நவம்பர் 21 

397

க.எண்: 2021110271அ

நாள்: 15.11.2021

அறிவிப்பு: தமிழ்த்தேசியப் போராளி வா.கடல்தீபன் நினைவுப் படத்திறப்பு விழா
கடலூர் – நவம்பர் 21 

அண்மையில் மறைவெய்திய நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த்தேசியப் போராளியுமான அண்ணன் வா.கடல்தீபன் அவர்களின் நினைவுப் படத்திறப்பு விழா, தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில், வருகின்ற 21-11-2021 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 10 மணியளவில், கடலூர் டி.வி.எம்.எஸ். திருமண மண்டபத்தில் நடைபெறவிருக்கின்றது.

தமிழ்த்தேசியப் போராளி!
வா.கடல்தீபன் படத்திறப்பு விழா
நினைவேந்தல் உரை:
செந்தமிழன் சீமான்
இடம்:
கடலூர் டி.வி.எம்.எஸ். திருமண மண்டபம்
தினத்தந்தி அலுவலகம் அருகில், கடலூர்
21-11-2021 ஞாயிற்றுக்கிழமை, காலை 10 மணியளவில்

இந்நிகழ்வில் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பொதுமக்களும் பேரெழுச்சியாக, பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்

முந்தைய செய்திசனநாயகத்தைக் கட்டிக்காக்க பேரரணாய் களத்தில் நிற்கும் ஊடகவியலாளர்களின் பக்கம்நின்று அவர்தம் பணிகளைப் போற்றுவோம்! – சீமான் பத்திரிகையாளர் நாள் வாழ்த்து
அடுத்த செய்திசிவகாசி தொகுதியில் வாக்குச்சீட்டு ரசீது வழங்கும் நிகழ்வு