ஊரக உள்ளாட்சித் தேர்தலையொட்டி சீமான் தலைமையில் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டக் கலந்தாய்வு

335

செய்திக்குறிப்பு: ஊரக உள்ளாட்சித் தேர்தலையொட்டி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டக் கலந்தாய்வு | நாம் தமிழர் கட்சி

எதிர்வரவிருக்கும் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலையொட்டி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் இன்று 03-09-2021 கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்டக் கலந்தாய்வுக்கூட்டத்தில் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களுக்குட்பட்ட அனைத்து மாவட்ட மற்றும் தொகுதித் தலைவர்-செயலாளர்களும் பங்கேற்றனர். மாநிலக் கட்டமைப்புக் குழுவினர் முன்னிலை வகித்தனர். இக்கலந்தாய்வில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கு அணியமாவது குறித்தும் வேட்பாளர்கள் தேர்வு உள்ளிட்ட தேர்தல் களப்பணிகள் குறித்தும் கலந்தாய்வு செய்யப்பட்டது.

இராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களுக்கான கலந்தாய்வு நாளையும் (04-09-2021), விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கான கலந்தாய்வு நாளை மறுநாளும் (05-09-2021) நடைபெறவிருக்கிறது.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திகுடியாத்தம் தொகுதி ஒன்றிய பொறுப்பாளர் நியமனம்
அடுத்த செய்திவாணியம்பாடி தொகுதி வழங்கும் நிகழ்வு