அறிவிப்பு: சட்டமன்றத் தேர்தல் – 2021 | அனைத்துநிலைப் பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டங்கள்

663

க.எண்: 2021010009

நாள்: 18.01.2021

அறிவிப்பு: சட்டமன்றத் தேர்தல் – 2021 | அனைத்துநிலைப் பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டங்கள்

எதிர்வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்-2021க்கான களப்பணிகளைச் சீரிய முறையில் திட்டமிட்டு செயற்படுத்தும் பொருட்டு, அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் கலந்தாய்வு மேற்கொள்ளவிருக்கின்றார். கலந்தாய்வுக் கூட்டங்கள் குறித்த விவரம் பின்வருமாறு,

கலந்தாய்வு நாள் கலந்தாய்வு நடைபெறும் இடம் கலந்தாய்வில் பங்கேற்கும் மாவட்டங்கள்
22-01-2021

வெள்ளிக்கிழமை
பிற்பகல் 03 மணி

தமிழரசி திருமண மண்டபம்,
புதுக்கோட்டை சாலை, பரிசுத்தம் நகர். தஞ்சாவூர்
திருச்சி, பெரம்பலூர், அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம்
23-01-2021

சனிக்கிழமை
காலை 10 மணி

எல்.எஸ்.மகால், ரக்மத் நகர்,
80 அடி சாலை, பாளையங்கோட்டை, வருமானவரி அலுவலகம் அருகில்.
திருநெல்வேலி
தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி
23-01-2021

சனிக்கிழமை
பிற்பகல் 03 மணி

ஆர்.கே.திருமண மண்டபம்,
ஒத்தக்கடை, மேலூர் சாலை,
வேளாண்மை கல்லூரி அருகில்.
மதுரை
திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், இராமநாதபுரம்
26-01-2021

செவ்வாய்க்கிழமை

காலை 10 மணி

வெங்கடேசுவரா நவீன அரிசி ஆலை,
விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகில்
விழுப்புரம்
திருவண்ணாமலை, கடலூர்

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்கால், புதுச்சேரி

அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுக்கான இக்கலந்தாய்வுக் கூட்டங்களில் மேலே அட்டவனையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த மாநில, மாவட்ட, தொகுதி, உள்ளிட்ட கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் பொறுப்பாளர்களும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நா.சந்திரசேகரன்
பொதுச்செயலாளர்

முந்தைய செய்திசுற்றறிக்கை: அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுக்கவிருக்கும் மக்கள் விழிப்புணர்வுப் பரப்புரை தொடர்பாக
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: ஒழுங்கு நடவடிக்கை