க.எண்: 2023110489
நாள்: 17.11.2023
அறிவிப்பு:
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார்
87ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு
(நவ.18 – கட்சித் தலைமை அலுவலகம், சென்னை)
நாட்டின் விடுதலைக்காகச் செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழறிஞர், நமது பாட்டன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 87ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக 18-11-2023 சனிக்கிழமையன்று, காலை 10 மணியளவில், கட்சித் தலைமை அலுவலகத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மலர்வணக்க நிகழ்வு நடைபெறவிருக்கின்றது.
இந்நிகழ்வில் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி