க.எண்: 2025080702
நாள்: 05.08.2025
அறிவிப்பு:
உலகப் பழங்குடியினர் நாள் – 2025 நாம் தமிழர் கட்சி – தமிழ்ப் பழங்குடியினர் பாதுகாப்புப் பாசறை நடத்தும் பழங்குடியினர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு பொதுக்கூட்டம்நாள்: ஆடி 23 | 08-08-2025 காலை 10 மணியளவில் இடம்:
|
உலகப் பழங்குடியினர் நாளையொட்டி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில்
தமிழ்ப் பழங்குடியினர் பாதுகாப்புப் பாசறை சார்பாக ஆடி 23ஆம் நாள் (08.08.2025) காலை 10 மணியளவில் கள்ளக்குறிச்சி மாவட்டம், வெள்ளிமலை பழைய பேருந்து நிலையம் அருகில், பழங்குடியினர் வாழ்வுரிமைப் பாதுகாப்புப் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது.
இப்பொதுக்கூட்டத்தில் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி