க.எண்: 2025100946
நாள்: 29.10.2025
அறிவிப்பு:
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், இராமநாதபுரம் திருவாடானை மண்டலத்தைச் சேர்ந்த கட்சியின் மாநில, மண்டல, மாவட்டப் பொறுப்பாளர்கள், மற்றும் அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுக்கான
கலந்தாய்வுக் கூட்டம், வருகின்ற 02-11-2025 அன்று காலை 10 மணி முதல் ஆர்.எஸ்.மங்களம், எஸ்.எம்.ஏ. மகால் அரங்கில் மாநில ஒருங்கிணைப்பாளர் முருக பாண்டி, மாநில ஒருங்கிணைப்பாளர் கண் இளங்கோ, மற்றும் மீனவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் தீரன் திருமுருகன் ஆகியோர் முன்னிலையில் நடைபெறவிருக்கிறது.
இந்நிகழ்வில் இராமநாதபுரம் திருவாடானை மண்டலத்தைச் சேர்ந்த கட்சியின் மாநில, மண்டல, மாவட்டப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி



