க.எண்: 2025090763
நாள்: 08.09.2025
அறிவிப்பு:
திருப்பூர் மாநகராட்சியின் நிர்வாகச் சீர்கேட்டால் தங்கள் வாழ்விடத்திலேயே வாழமுடியாமல் தவிக்கும் மக்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், ஒருங்கிணைந்த திருப்பூர் மாவட்டம் சார்பாக, வருகின்ற
09-09-2025 அன்று காலை 09:30 மணி முதல் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெறவிருக்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் அவர்கள் கண்டனவுரையாற்றவிருக்கிறார்.
இந்நிகழ்வில் திருப்பூர் மாவட்டம் மற்றும் அதன் அருகமை மாவட்டங்களுக்குட்பட்ட அனைத்து சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த கட்சியின் மாநில, மண்டல, மாவட்டப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி