தலைமை அறிவிப்பு – கூட்டரசுக் கோட்பாடு சிறப்பு மாநாடு

32

க.எண்: 2025050497

நாள்: 10.05.2025

அறிவிப்பு:

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பாக, ஐயா பெ.மணியரசன் அவர்களின் தலைமையில் இன்று 10-05-2025 காலை 09 மணிமுதல் தஞ்சாவூர் நாஞ்சில் கோட்டை சாலையில் அமைந்துள்ள காவேரி திருமண மண்டபத்தில் நடைபெற்றுவரும் கூட்டரசுக் கோட்பாடு சிறப்பு மாநாட்டில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்று  சிறப்புரையாற்றவிருக்கிறார்.

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர்
ஐயா பெ.மணியரசன் அவர்களின் தலைமையில்

கூட்டரசுக் கோட்பாடு
சிறப்பு மாநாடு

சிறப்புரை:
செந்தமிழன் சீமான் அவர்கள்
தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி

நாள்:
சித்திரை 27 | 10-05-2025 மாலை 04 மணிக்கு

இடம்:

காவேரி திருமண மண்டபம்
நாஞ்சில் கோட்டை சாலை, தஞ்சாவூர்

இம்மாநாட்டில், கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு


கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – சேலம் மேற்கு மண்டலம் (சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – ஈரோடு மேற்கு மண்டலம் (ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்