க.எண்: 2025040397
நாள்: 19.04.2025
சுற்றறிக்கை:
ஊரக மற்றும் நகர்ப்புற
உள்ளாட்சி தற்செயல் / இடைக்காலத் தேர்தல்கள் தொடர்பாக
ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தற்போது காலியாக உள்ள பதிவியிடங்களுக்கு தற்செயல் / இடைக்காலத் தேர்தல்களை நடத்த ஆயத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும், சென்னை மாநகராட்சியில் 4 மாமன்ற உறுப்பினர்களுக்கான காலிப்பதவியிடங்கள் உட்பட 35 மாவட்டங்களில் உள்ள 133 காலிப் பதவியிடங்களுக்கும், காஞ்சிபுரம் செங்கல்பட்டு வேலூர் இராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் ஏற்பட்டுள்ள 315 காலிப் பதவியிடங்களுக்கும் தற்செயல்/இடைக்காலத் தேர்தல்களை எதிர்வரும் மே மாதத்தில் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் இன்று (25-03-2025) செய்தி வெளியிட்டுள்ளது.
இதனையொட்டி, ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தற்செயல்/ இடைக்காலத் தேர்தல்களுக்கான ஆயத்தப்பணிகளை விரைந்து தொடங்கவேண்டும் என தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.
எனவே, கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும்,
ஒருங்கிணைந்து உள்ளாட்சித் தேர்தல் குறித்து மண்டல அளவில் கலந்தாய்வுகளை மேற்கொண்டு, அதனடிப்படையில், குறிப்பிட்ட பொறுப்பாளர்கள் மட்டும் தங்களது மாவட்டத் தேர்தல் அலுவலகத்திற்கு நேரில் சென்று உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவிருக்கும் இடங்கள் குறித்த தகவல்களைக் கேட்டறிய வேண்டும் எனவும், அதன் விவரங்களைச் சேகரித்து மண்டலச் செயலாளர்கள் தலைமை அலுவலகத்திற்கு உடனடியாகத் தெரியப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி