க.எண்: 2025040386
நாள்: 18.04.2025
அறிவிப்பு:
பெருந்தமிழர் பா.சிவந்தி ஆதித்தனார்
12ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு
(19-04-2025, சென்னை – போயஸ் தோட்டம்)
‘அச்சு ஊடகங்களின் அரசர்’ பெருந்தமிழர் ஐயா பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் 12ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, நாளை 19-04-2025 காலை 10 மணியளவில், சென்னை போயஸ் தோட்டத்தில் அமைந்துள்ள அவரது நினைவில்லத்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் மலர்வணக்கம் செலுத்தவிருக்கிறார்.
இந்நிகழ்வில், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் உடன் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி