தலைமை அறிவிப்பு – புதிய கட்டமைப்பின்படி நியமிக்கப்பட்டுள்ள தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த பொறுப்பாளர்களுடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல்

44

க.எண்: 2025040294

நாள்: 03.04.2025

அறிவிப்பு:

புதிய கட்டமைப்பின்படி நியமிக்கப்பட்டுள்ள
தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த பொறுப்பாளர்களுடன்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
செந்தமிழன் சீமான் அவர்கள்
சந்திப்பு மற்றும் கலந்துரையாடல்
நாள்:
04-04-2025 காலை 10 மணி முதல்இடம்:
மாஸ்டர் மகால்,
(முடக்குச் சாலை)
மதுரை

தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் புதிய கட்டமைப்பின் அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ள கட்சி மற்றும் பாசறைகளின் மாநில, மண்டல, மாவட்ட மற்றும் தொகுதிப் பொறுப்பாளர்களை, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் வருகின்ற 04-04-2025 அன்று காலை 10 மணி முதல் மதுரை முடக்குச் சாலையில் அமைந்துள்ள மாஸ்டர் மகால் அரங்கில் சந்தித்து கலந்துரையாடவிருக்கிறார்.

இந்நிகழ்வில் மேற்குறிப்பிட்டுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு


கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – புதிய கட்டமைப்பின்படி நியமிக்கப்பட்டுள்ள தேனி, திண்டுக்கல், விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களைச் சேர்ந்த பொறுப்பாளர்களுடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல்
அடுத்த செய்திஈழத்திலிருந்து ஏதிலியாக தமிழ்நாட்டில் வசிக்கும் நீச்சல் வீராங்கனை அன்புமகள் தனுஜாவிற்கு குடியுரிமை வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்