க.எண்: 2024120405
நாள்: 25.12.2024
அறிவிப்பு:
நாம் தமிழர் தொழிற்சங்கப் பேரவையின்
தானி தொழிலாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம்
(சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள்)
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், தொழிற்சங்கப் பேரவையின் மாநிலத் தலைவர் அன்புத்தென்னரசன் மற்றும் மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் சுரேஷ்குமார் ஆகியோரின் முன்னிலையில்,
வருகின்ற 29-12-2024 அன்று காலை 10 மணிக்கு, கட்சித் தலைமை அலுவலகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த
தானி தொழிலாளர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறவிருக்கிறது.
இக்கலந்தாய்வுக் கூட்டத்தில் நாம் தமிழர் தொழிற்சங்கப் பேரவையின் மாநிலப் பொறுப்பாளர்களும், தானி தொழிலாளர்களும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி