‘சிலம்புச்செல்வர்’ பெருந்தமிழர் நமது ஐயா மா.பொ.சிவஞானம் அவர்களின் 29ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி 03-10-2024 அன்று வியாழக்கிழமை காலை 10 மணியளவில் சென்னை, பாண்டி பஜார், தியாகராயர்ச் சாலையில் அமைந்துள்ள ஐயாவின் திருவுருவச்சிலைக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் மலர்வணக்கம் செலுத்தினார்.