ஆண்டுதோறும் கட்டணத் தொலைக்காட்சி ஒலியலை வரிசைகளின் விலைகள், சீரற்ற முறையில் உயர்த்தப்படுவதை கட்டுப்படுத்தக்கோரியும் பொது மக்களின் பொழுதுபோக்கு பயன்படான தொலைக்காட்சி சேவைக்கு 18% சரக்கு மற்றும் சேவை வரி (GST) விதிக்கப்படுவதை முற்றாக நீக்க கோரியும் தமிழக கம்பிவடத் தொலைக்காட்சி உதவியாளர்கள் (Cable TV operators) பொதுநலச்சங்கம் [TCOA] சார்பில் 23-10-2024 அன்று சென்னை எழும்பூர் ராஜரத்தினம் திடல் அருகில் மாநில அளவிலான மாபெரும் உண்ணாநிலைப் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்று கண்டன உரையாற்றினார்.