நாம் தமிழர் கட்சி – திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதியின் செய்தித்தொடர்பாளர் அன்பிற்கும், மதிப்பிற்கும் உரிய ஐயா வண்ணை கணேசன் அவர்கள், கள்ளச்சாராயப் படுகொலைகளைக் கண்டித்து திருநெல்வேலியில் நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த துயரச்செய்தியறிந்து பேரதிர்ச்சியும், மிகுந்த வேதனையும் அடைந்தேன்.
மண்ணையும், மக்களையும் உயிராய் நேசித்து, அனைத்து உயிர்களுக்குமான அரசியலை முன்னெடுக்கும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் இணைந்து, இளைய தலைமுறைப்பிள்ளைகளுக்கு முன்மாதிரியாக களப்பணியாற்றி வந்த ஐயாவை இழந்திருப்பது மிகுந்த மனத்துயரத்தைத் தருகிறது.
ஐயா வண்ணை கணேசன் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அன்பிற்குரிய ஐயா வண்ணை கணேசன் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!