அறிவிப்பு: பெண்களுக்கான தங்கும் விடுதி ஏற்பாடு  (மே18, இன எழுச்சிப் பொதுக்கூட்டம் – தூத்துக்குடி)

390

க.எண்: 2023050196

நாள்: 10.05.2023

அறிவிப்பு:

பெண்களுக்கான தங்கும் விடுதி ஏற்பாடு
(மே18, இன எழுச்சிப் பொதுக்கூட்டம் – தூத்துக்குடி)

 எதிர்வரும் மே 18 வியாழக்கிழமை அன்று மாலை 04 மணியளவில், மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்டம் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் தூத்துக்குடி – புதூர் பாண்டியாபுரம் விலக்கு பகுதியில்  ( நிலா குளிர்பதனக்கிடங்கு அருகில்) உள்ள திடலில் பேரெழுச்சியாக நடைபெறவுள்ளது.

இம்மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகைதரும் பெண்கள்  பொதுக்கூட்டத்திற்கு தயாராவதற்காக   தூத்துக்குடி மாவட்டம் மதுரை விரைவுச்சாலையில் உள்ள மேல அரசடி சுங்கச்சாவடி அருகிலுள்ள சிவஜோதி விடுதியில் ( Hotel Sivajothi ) தங்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஆகவே, பொதுக்கூட்டத்திற்கு வருகை தரும் பெண்கள் இவ்வசதியைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

 

முந்தைய செய்திஅறிவிப்பு: ஆண்களுக்கான தங்கும் விடுதி ஏற்பாடு  (மே18, இன எழுச்சிப் பொதுக்கூட்டம் – தூத்துக்குடி)
அடுத்த செய்திமருத்துவர் ஐயா சபாரட்ணம் சிவகுமாரன் அவர்களின் புகழ் ஈழத்தாயக வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை.! – சீமான் புகழாரம்