அறிவிப்பு: ஏப். 09, தானி (ஆட்டோ) ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை மீட்க, சீமான் தலைமையில் நாம் தமிழர் தொழிற்சங்கப் பேரவை நடத்தும் மாபெரும் ஆர்ப்பாட்டம் – சென்னை வள்ளுவர்கோட்டம்

136

க.எண்: 2023040146
நாள்: 05.04.2023

அறிவிப்பு:

தானி (ஆட்டோ) ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை மீட்க நடவடிக்கைகள் எடுக்கக்கோரியும், மீட்டர் கட்டணத்தை உயர்த்தக் கோரியும் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சியின் தொழிற்சங்கப் பேரவை சார்பாக,
தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில், வருகின்ற 09-04-2023 ஞாயிற்றுக்கிழமை, காலை 10 மணியளவில், சென்னை வள்ளுவர்கோட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.

தானி (ஆட்டோ) ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை மீட்க,
மீட்டர் கட்டணத்தை உயர்த்தக் கோரி
நாம் தமிழர் தொழிற்சங்கப் பேரவை நடத்தும்
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
கண்டனப் பேருரை:
செந்தமிழன் சீமான்
09-04-2023 ஞாயிற்றுக்கிழமை, காலை 10 மணிக்கு

இடம்:
வள்ளுவர் கோட்டம்
(சென்னை)

இம்மாபெரும் ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், தொழிற்சங்கப் பேரவை உள்ளிட்ட அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், தானி ஓட்டுநர்களும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திகல்வி வள்ளல் பா.க.மூக்கையாத்தேவர் நூற்றாண்டு புகழ்வணக்க நிகழ்வு – தலைமை அலுவலகம் | சீமான் செய்தியாளர் சந்திப்பு
அடுத்த செய்திகுளித்தலை தொகுதி – இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்