க.எண்: 2023040174
நாள்: 25.04.2023
அறிவிப்பு:
மே 18, இனப் படுகொலை நாள்: வீழ்வதல்ல தோல்வி! வீழ்ந்தே கிடப்பதுதான் தோல்வி!, என்ற இன எழுச்சி முழக்கத்தோடு நாம் தமிழர் கட்சி சார்பாக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில், ஒவ்வொரு ஆண்டும் முன்னெடுக்கப்பட்டுவரும் மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்டமானது, இந்த ஆண்டு தூத்துக்குடி, புதூர் பாண்டியாபுரம் விலக்கு, நிலா குளிர்பதனக்கிடங்கு அருகில் உள்ள திடலில் வருகின்ற
18-05-2023 வியாழக்கிழமை, மாலை 04 மணியளவில் பேரெழுச்சியாக நடைபெறவிருக்கிறது.
மே 18, இனப் படுகொலை நாள்
வீழ்வதல்ல தோல்வி! வீழ்ந்தே கிடப்பதுதான் தோல்வி!
மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்டம்
எழுச்சியுரை:
செந்தமிழன் சீமான்
18-05-2023 வியாழக்கிழமை, மாலை 04 மணிக்குஇடம்:
தூத்துக்குடி
புதூர் பாண்டியாபுரம் விலக்கு
(நிலா குளிர்பதனக்கிடங்கு அருகில்)
இம்மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்டத்தில், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் உணர்வெழுச்சியோடு பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி