அறிவிப்பு: வீரத்தமிழச்சி செங்கொடி 11ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் வீரவணக்க நிகழ்வு – தலைமையகம்

179

க.எண்: 2022080374

நாள்: 25.08.2022

அறிவிப்பு: வீரத்தமிழச்சி செங்கொடி 11ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் வீரவணக்க நிகழ்வு – தலைமையகம்

மூன்று தமிழர்களின் இன்னுயிரைக் காக்க தன்னுயிரை ஈந்த வீரத்தமிழச்சி செங்கொடியின் 11ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் வீரவணக்க நிகழ்வு நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை சார்பாக 28-08-2022 ஞாயிற்றுக்கிழமை, காலை 10 மணியளவில் கட்சித் தலைமை அலுவலகத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் நடைபெறவிருக்கின்றது.

தலைமை:

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நிகழ்விடம்: கட்சித் தலைமை அலுவலகம்
இராவணன் குடில், சென்னை

நாள்: 28-08-2022 ஞாயிற்றுக்கிழமை,
காலை 10 மணியளவில்

 

இந்நிகழ்வில் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், மகளிர் பாசறை உள்ளிட்ட அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பொதுமக்களும் உணரவெழுச்சியுடன் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஆகமத்தின் பெயரால் அனைத்துச்சாதியினரும் அர்ச்சகராவதற்கு தடை. தமிழக அரசு தனிச்சட்டமியற்றி ஆரியச் சூழ்ச்சியை முறியடிக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திவிளைநிலங்களை அழித்து புதிய வானூர்தி நிலையம் அமைக்கும் திட்டத்தைக் கைவிடக்கோரி 13 கிராம மக்களுடன் சீமான் நேரடி கள ஆய்வு