பெருந்தமிழர் கக்கன் புகழ்வணக்கப் பொதுக்கூட்டம் – தும்பைப்பட்டி (மேலூர்) | சீமான் புகழ்வணக்கவுரை

84

பெருந்தமிழர் கக்கன் புகழ்வணக்கப் பொதுக்கூட்டம் – சீமான் புகழ்வணக்கவுரை

நேர்மையின் நேர்வடிவம் பெருந்தமிழர் நமது ஐயா கக்கன் அவர்களின் பிறந்தநாளையொட்டி, ஐயா பிறந்த ஊரான மதுரை மேலூர் அருகில் உள்ள தும்பைப்பட்டியில் நாம் தமிழர் கட்சி மற்றும் கக்கன் அவர்களின் அறக்கட்டளை சார்பாக 18-06-2022 சனிக்கிழமையன்று மாபெரும் புகழ்வணக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

முன்னதாக, மதுரை மேலூர் நகரத்திலுள்ள ஐயா கக்கன் அவர்களின் திருவுருவச்சிலைக்கு தலைமை ஒருங்கிணைபாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் மாலை அணிவித்து மலர்வணக்கம் செலுத்தினார். அடுத்து, தும்பைப்பட்டியில் உள்ள ஐயா கக்கன் அவர்களின் நினைவில்லத்தைப் பார்வையிட்டு, அங்குள்ள ஐயாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர்வணக்கம் செலுத்தினார்.

அதனைத்தொடர்ந்து, தும்பைப்பட்டியில் நடைபெற்ற பெருந்தமிழர் கக்கன் புகழ்வணக்கப் பொதுக்கூட்டத்தில் புகழ்வணக்க உரையாற்றினார்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதென்காசி சட்டமன்றத் தொகுதி பெருந்தமிழர் காயிதே மில்லத் அவர்களுக்கு புகழ் வணக்க கொடியேற்றம்
அடுத்த செய்திசிறப்பு முகாம்கள் எனப்படும் சித்திரவதைக்கூடங்களில் அடைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழ்ச்சொந்தங்களை உடனடியாக விடுதலை செய்து, காவல்துறையின் கியூ பிரிவு அமைப்பைக் கலைக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்