க.எண்: 2019110170
நாள்: 03.11.2019
சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் மாவட்டவாரியாக கலந்தாய்வு (ஈரோடு மற்றும் திருப்பூர்)
நமது கட்சியின் உட்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் அமைக்கப்பட்ட மாநிலக் கட்டமைப்புக் குழு, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மாவட்டவாரியாக அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுடன் கலந்தாய்வு மேற்கொள்ளவிருக்கின்றனர்.
நாள் | நேரம் | கலந்தாய்வுக்கான மாவட்டம் | கலந்தாய்வு நடைபெறும் இடம் |
05-11-2019 செவ்வாய் |
காலை 09 மணி | ஈரோடு | அண்ணாமலையார் உணவகம்.
கோபி-ஈரோடு முதன்மை சாலை, குள்ளம்பாளையம் பிரிவு அருகில், ஆசிரியர் நகர் பேருந்து நிறுத்தம் அருகில், கோபிசெட்டிபாளையம். |
பிற்பகல் 03 மணி | திருப்பூர் | அன்னமயி உணவகம்,
7/72, சன்னதி வீதி , திருமுருகன் பூண்டி, அவிநாசி சாலை, திருப்பூர் |
மாவட்டக் கலந்தாய்வின் போது மாநிலக் கட்டமைப்புக் குழுவினர் மற்றும் அந்தந்த மாவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து தொகுதிகளைச் சேர்ந்த அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நா.சந்திரசேகரன்
பொதுச்செயலாளர்