புதிய அரசியல் படைக்க நாம் தமிழர் கட்சியை ஆதரியுங்கள்! – வேலூரில் சீமான் பரப்புரை

93

செய்திக்குறிப்பு: புதிய அரசியல் படைக்க நாம் தமிழர் கட்சியை ஆதரியுங்கள்! – வேலூரில் சீமான் பரப்புரை | இன்றையப் பயணத்திட்ட விவரம் – நான்காம் நாள் 01-08-2019 | நாம், தமிழர் கட்சி

எதிர்வரும் ஆகத்து-05 அன்று நடைபெறவிருக்கும் வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக “விவசாயி” சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் தீபலட்சுமி அவர்களை ஆதரித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், தொடர் பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார்.

நேற்று 31-07-2019 புதன்கிழமை மாலை 04 மணியளவில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் வேலூர், முள்ளிப்பாளையம் மாங்காய் மண்டியில் இருந்து வேலூர் மாநகராட்சி சாலைகளில் பேரணியாக சென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.  சங்கரன்பாளையத்தில் பேரணி நிறைவுற்றது. அதனைத்தொடர்ந்து சங்கரன்பாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரையாற்றினார்.

காணொளி:

நான்காம் நாளான இன்று 01-07-2019 வியாழக்கிழமை மாலை 04 மணியளவில் குடியாத்தம் பேருந்து நிலையம் அருகிலும்  இரவு 08 மணியளவில் பேரணாம்பட்டு பேருந்து நிலையம் அருகிலும்நடைபெறவிருக்கும் பரப்புரைப் பொதுக்கூட்டங்களில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பரப்புரை நிகழ்த்துகிறார்.

புதியதொரு தேசம் செய்வோம்!
மக்கள் புரட்சியால் அதை உறுதி செய்வோம்!

உழவை மீட்போம்! உலகைக் காப்போம்!
நமது சின்னம் 
விவசாயி


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084

முந்தைய செய்திமுக்கிய அறிவிப்பு:
அடுத்த செய்திஅறிவிப்பு: மாபெரும் மகளிர் பேரணி | வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் 2019