சுற்றறிக்கை: மாவட்டவாரியாக பொறுப்பாளர்கள் சந்திப்பு – முதற்கட்டம் (காஞ்சிபுரம் மாவட்டம்)

149

சுற்றறிக்கை: மாவட்டவாரியாக பொறுப்பாளர்கள் சந்திப்பு – முதற்கட்டம் (காஞ்சிபுரம் மாவட்டம்) | நாம் தமிழர் கட்சி

பிப்ரவரி 17ஆம் தேதி முதல், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மாவட்டவாரியாக அனைத்துநிலை பொறுப்பாளர்களையும் சந்தித்து கட்சியின் உட்கட்டமைப்பை முறைபடுத்தவிருப்பதால் தலைமைக்கு ஒத்துழைப்பு நல்கி மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்கள் தங்களது மாவட்டத்திற்குட்பட்ட தொகுதி, மாநகர, நகர, பேரூராட்சி, ஒன்றியம், ஊராட்சி, வட்டம், கிளை குறித்த விவரங்கள் அடங்கிய தொகுதி உட்கட்டமைப்புப் பட்டியலை விரைந்து தலைமை அலுவலகத்திற்கு அஞ்சல் மூலமோ நேரடியாகவோ அல்லது (ravanankudil@gmail.com) மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பிவைக்கும்படி கடந்த 30-01-2018 சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.

தொகுதி உட்கட்டமைப்புப் பட்டியல் முன்னதாக கிடைக்கப்பெற்றதன் அடிப்படையில் முதற்கட்டமாக வருகின்ற 17-02-2018 (சனிக்கிழமை) காலை 10 மணிமுதல் மாலை 04 மணிவரை காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்பட்ட சோழிங்கநல்லூர், ஆலந்தூர், திருப்பெரும்புதூர், பல்லாவரம், தாம்பரம் மற்றும் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதிகளின் அனைத்துநிலை பொறுப்பாளர்களுடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் கலந்துரையாடி புதிய நிர்வாகிகளை நியமனம் செய்கிறார்.

இரண்டாம் நாள் 20-02-2018 (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிமுதல் மாலை 04 மணிவரை காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்பட்ட செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம் மற்றும் உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதிகளுக்கான சந்திப்பு நடைபெறும்.

இடம்: அன்னை அருள் திருமண அரங்கம், கிழக்கு தாம்பரம்

அவ்வயம் சந்திப்பிற்கு அழைக்கப்பட்டுள்ள தொகுதிகளின் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் புதிய பொறுப்புகளுக்கு பரிந்துரை செய்யப்பட்ட உறுப்பினர்கள் அனைவரும் கட்டாயம் உறுப்பினர் அடையாள அட்டையுடன் குறித்த நாளில் குறித்த நேரத்தில் தவறாது பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

குறிப்பு: செய்தி மாற்றம் செய்யப்பட்டுள்ளது 15-02-2018

முந்தைய செய்திதமிழாற்றுப்படை – மறைமலையடிகள் பற்றி கவிப்பேரரசு வைரமுத்து கட்டுரை அரங்கேற்றம் | சீமான் பங்கேற்பு
அடுத்த செய்திகாவிரி நதிநீர் சிக்கலில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதி; கூட்டாட்சித் தத்துவத்திற்குச் செய்யப்பட்டப் பச்சைத்துரோகம்! – சீமான் அறிக்கை