அறிவிப்பு: ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: டிச-10 முதல் சீமான் தலைமையில் வாக்கு சேகரிப்பு

34

அறிவிப்பு; ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: 10-12-2017 பத்தாவது நாள் பரப்புரைத் திட்டம் | நாம் தமிழர் கட்சி

வருகின்ற டிசம்பர் 21ஆம் நாள் நடைபெறவிருக்கும் ஆர்.கே நகர் இடைதேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராக மாநில ஒருங்கிணைப்பாளர் கா.கலைக்கோட்டுதயம் அவர்கள் மெழுகுவர்த்திகள் சின்னத்தில் போட்டியிடுகிறார்கள். இதனையொட்டி கடந்த 01-12-2017 முதல் நமது கட்சியின் தேர்தல் பரப்புரைப் பணிகள் முழுவீச்சில் தொடங்கி தொடர்ந்து ஒன்பது நாட்களாக நடைபெற்றுவருகிறது.

10வது நாள் 10-12-2017 (ஞாயிற்றுக்கிழமை) தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் பரப்புரை மேற்கொள்ளவிருக்கும் திட்டவிவரம்:

நேரம்: காலை 09:30 மணி முதல் நண்பகல் 12 மணி வரை வீடு வீடாக வாக்கு சேகரிப்பு
துவங்குமிடம்: 43வது வட்டம், பவர் குப்பம், சிங்காரவேலர் நகர், திருவள்ளுர் நகர், காசிமாநகர்

நேரம்: பிற்பகல் 02:30 மணி முதல் மாலை 5 மணி வரை வீடு வீடாக வாக்கு சேகரிப்பு
துவங்குமிடம்: 43வது வட்டம், பவர் குப்பம், சிஜி நகர், வினாயகபுரம், ஒத்தவாடை, பல்லவன் நகர், காசிபுரம் ‘B’ Block, திடிர் நகர்

நேரம்: மாலை 06 மணிக்கு பொதுக்கூட்டம்
எழுச்சியுரை: சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர்
இடம்: 43வது வட்டம், சிஜி காலனி. சந்தை அருகில்
தொடர்புக்கு: 8667624558 / 8072645211

இராயபுரம், துறைமுகம், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு* தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் *சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர்மா வட்டப் பொறுப்பாளர்கள் பரப்புரைப் *பணிகளில்* இடைத்தேர்தல் பணிக்குழுவோடு இணைந்து செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அனைத்து தொகுதி நாம் தமிழர் உறவுகளும் ஆர்.கே நகர் தொகுதி தேர்தல் பரப்புரைகளில் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு உரிமையோடு கேட்டுக்கொள்கிறோம்.

தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084

முந்தைய செய்திஅறிவிப்பு; ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: 09-12-2017 ஒன்பதாவது நாள் பரப்புரைத் திட்டம்
அடுத்த செய்திஆர்.கே நகர் தேர்தல்: 09-12-2017 ஒன்பதாவது நாள் வாக்கு சேகரிப்பு மற்றும் பொதுக்கூட்டம்