தேசிய கடல்சார் நாளையொட்டி, இந்திய கடலோடிகள் நல அமைப்பு நடத்தும் மாபெரும் கருத்தரங்கம் – சிறப்பு விருந்தினராக சீமான் பங்கேற்பு

149

க.எண்: 2023040147
நாள்: 05.04.2023

அறிவிப்பு:

60ஆம் ஆண்டு தேசிய கடல்சார் நாளையொட்டி, இந்திய கடலோடிகள் நல அமைப்பு (ISWO – Indian Seafarers Welfare Organization) சார்பாக, நாளை 06-04-2023 வியாழக்கிழமையன்று மாலை 06 மணியளவில் சென்னை துறைமுகத்தில் உள்ள சீபேரர்ஸ் கிளப் (Seafarer’ Club) -இல் நடைபெறும் மாபெரும் கருத்தரங்கில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு ‘சுற்றுச்சூழல் பாதுகாவலர்’ விருது வழங்கப்படவிருக்கிறது.

இந்நிகழ்வில் பங்கேற்கவிருக்கும் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களுடன் நாம் தமிழர் உறவுகள் திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – வேலூர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – செய்யாறு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்