தலைமை அறிவிப்பு – தூய்மைப் பணியாளர்களைத் தனியார் மயமாக்குவதைக் கண்டித்தும், பணிநிரந்தரம் செய்யக்கோரியும் மாபெரும் ஆர்ப்பாட்டம்

59

க.எண்: 2025080703

நாள்: 05.08.2025

அறிவிப்பு:

தூய்மைப் பணியாளர்களைத் தனியார் மயமாக்குவதைக் கண்டித்தும், பணிநிரந்தரம் செய்யக்கோரியும்

நாம் தமிழர் தொழிற்சங்கப் பேரவை நடத்தும்
மாபெரும் ஆர்ப்பாட்டம்

கோரிக்கையுரை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி

நாள்:
ஆடி 25 | 10-08-2025 காலை 10 மணியளவில்

இடம்:

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில்
துறைமுகம் தொகுதி, சென்னை மாவட்டம்

 

தூய்மைப் பணியாளர்களைத் தனியார் மயமாக்குவதைக் கண்டித்தும், பணிநிரந்தரம் செய்யக்கோரியும், நாம் தமிழர் தொழிற்சங்கப் பேரவை சார்பாக, ஆடி 25ஆம் நாள் (10.08.2025) காலை 10 மணியளவில் சென்னை மாவட்டம், துறைமுகம் தொகுதி,  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.

இம்மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு


கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திநா.த.க.வின் உயிர்மநேய அரசியலை பாராட்டியுள்ள இயற்கை ஆர்வலர் என் ஆருயிர் இளவல் வி.ப.ஜெயபிரதீப் அவர்களுக்கு சீமான் நெஞ்சம் நிறைந்த அன்பும், நன்றியும்!
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – பழங்குடியினர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு பொதுக்கூட்டம்