தமிழக அரசின் உயர் கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ள தனியார் பல்கலைக்கழக சட்டத் திருத்த வரைவு 2025னை எதிர்த்து, 12-11-2025 அன்று சென்னை எழும்பூர் இராசரத்தினம் விளையாட்டுத் திடல் அருகே பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மாபெரும் போராட்டத்தினை முன்னெடுத்துவருகிறது.
இப்போராட்டத்தில் அன்று மாலை 04 மணி அளவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றினார்.


