க.எண்: 2025100935
நாள்: 24.10.2025
அறிவிப்பு:
| வீரமிகு நமது பாட்டன்கள்
மருது பாண்டியர்கள் நாள்: ஐப்பசி 10 | 27-10-2025 காலை 10 மணியளவில் இடம்: காளையார்கோவில் நினைவிடம்
|
வீரமிகு நமது பாட்டன்கள் மருது பாண்டியர்கள் நினைவுநாளையொட்டி,
நாம் தமிழர் கட்சி சார்பாக வருகின்ற ஐப்பசி 10ஆம் நாள் 27-10-2025 காலை
10 மணியளவில் சிவகங்கை மாவட்டம், காளையார்கோயிலில் உள்ள பாட்டன்கள் மருது பாண்டியர்கள் நினைவிடத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மலர்வணக்க நிகழ்வு நடைபெறவிருக்கிறது.
இந்நிகழ்வில் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி



