க.எண்: 2025090787
நாள்: 23.09.2025
அறிவிப்பு:
அச்சு ஊடகங்களின் அரசர்!
ஐயா பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் நாள்: புரட்டாசி 08 | 24-09-2025 காலை 10 மணியளவில் இடம்: நினைவில்லம்
|
‘அச்சு ஊடகங்களின் அரசர்’ பெருந்தமிழர் ஐயா பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் பிறந்தநாளையொட்டி, புரட்டாசி 08 (24-09-2025) காலை 10 மணியளவில் சென்னை போயஸ்கார்டனில் அமைந்துள்ள அவரது நினைவில்லத்தில் நடைபெறும் மலர்வணக்க நிகழ்வில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்று மலர்வணக்கம் செலுத்தவிருக்கிறார்.
இந்நிகழ்வில், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி