தலைமை அறிவிப்பு – திருப்புவனம் அஜித்குமார் மரணத்திற்கு நீதி வேண்டியும், தொடரும் காவல்நிலையப் படுகொலைகளைத் தடுக்கக் கோரியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

34

க.எண்: 2025070650

நாள்: 06.07.2025

அறிவிப்பு:

திருப்புவனம் அஜித்குமார் மரணத்திற்கு நீதி வேண்டியும்,
தொடரும் காவல்நிலையப் படுகொலைகளைத் தடுக்கக் கோரியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

தலைமை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாள்:
ஆனி 24 | 08-07-2025 மாலை 04 மணி

இடம்:
சந்தை திடல்
திருப்புவனம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச்சென்று கொடூரமாகத் தாக்கி படுகொலை செய்யப்பட்ட இளைஞர் அஜீத்குமார் அவர்களின் மரணத்திற்கு நீதி வேண்டியும், தமிழ்நாட்டில் திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற கடந்த நான்கு ஆண்டுகளில் தொடர்ச்சியாக நிகழும் காவல்நிலையப் படுகொலைகளைத் தடுக்கக் கோரியும், நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 08-07-2025 அன்று மாலை 04 மணிக்கு திருப்புவனம் சந்தை திடல் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும்,
நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு


கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திபகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்க் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் சங்கமம்! – சீமான் புகழ் வணக்கவுரை நிகழ்த்தினார்!
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – சமூகநீதிப் போராளி தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் 166ஆம் ஆண்டு பிறந்தநாள் மலர்வணக்க நிகழ்வு தலைமை: செந்தமிழன் சீமான்