க.எண்: 2025060604
நாள்: 13.06.2025
முக்கிய அறிவிப்பு:
தமிழர் இறைவன் திருமுருகப்பெருமானின் திருச்செந்தூர் திருக்கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தக்கோரி வீரத்தமிழர் முன்னணி மற்றும் தெய்வத்தமிழ்ப் பேரவை இணைந்து நடத்தும் மாபெரும் பொதுக்கூட்டம்
நாள்: வைகாசி 31 | 14–06-2025 மாலை 04 மணி இடம்: திருச்செந்தூர் சி.பா.ஆதித்தனார் திடல் (ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில்) |
தலைநிலக் குறிஞ்சி தந்த தலைவன், தமிழ் இறைவன், நமது முப்பாட்டன் திருமுருகப்பெருமானின் திருச்செந்தூர் திருக்கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தக்கோரி நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி மற்றும் தெய்வத்தமிழ்ப் பேரவை இணைந்து நடத்தும் மாபெரும் பொதுக்கூட்டம் காவல்துறை அனுமதிபெறப்பட்டதையடுத்து நாளை 14-06-2025 மாலை 04 மணியளவில் திருச்செந்தூரில் திட்டமிட்டபடி நடைபெறவிருக்கிறது.
இம்மாபெரும் பொதுக்கூட்டத்தில் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும்,
நாம் தமிழர் உறவுகளும், தெய்வத்தமிழ்ப் பேரவை உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி