க.எண்: 2025050525
நாள்: 13.05.2025
அறிவிப்பு:
வீரமிகு எங்கள் பாட்டனார் பெரும்பிடுகு முத்தரையர் 1350ஆம் ஆண்டு பிறந்தநாள் மலர்வணக்க நிகழ்வுதலைமை: செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாள்: இடம்: |
வீரமிகு எங்கள் பாட்டனார் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1350ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி, வருகின்ற 23-05-2025 காலை 10 மணியளவில் திருச்சி ஒத்தக்கடையில் அமைந்துள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் திருவுருவச்சிலைக்கு, நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் மாலை அணிவித்து மலர்வணக்கம் செலுத்தவிருக்கிறார்.
இந்நிகழ்வில் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி