காவலர் நாளையொட்டி சீமான் வாழ்த்து!

17

கொட்டும் மழை, கடும் வெயில், குளிர் என எல்லாக் காலங்களிலும் இரவு-பகல் பாராது, புயல், வெள்ளம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் என்றாலும், திருவிழாக்கள், அரசியல் பொதுக்கூட்டங்கள், ஆன்மீக ஒன்றுகூடல்கள், தலைவர்கள் வருகை, சாதி-மதக்கலவரங்கள், சமூக விரோதிகளின் குற்றச்செயல்கள் என நாள்தோறும் நாட்டில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்விலும் தங்கள் இன்னுயிரைப் பொருட்படுத்தாது மக்களின் உயிரையும், உடைமையும் பாதுகாக்கும் உன்னதப் பணிபுரியும் காவலர் பெருமக்களைப் போற்றும் நாள் இன்று!

அர்ப்பணிப்புமிக்க கடமையுணர்வுடன் காவல்துறையினரின் கடும் உழைப்பையும், இணையற்ற ஈகத்தையும் உணர்ந்த காரணத்திலேயே, காவல்துறையினருக்கு வாரத்தில் ஒரு நாள் ஓய்வளித்தல், அவர்களது மன அழுத்தத்தைப் போக்க ஆண்டுதோறும் இருமுறை குடும்பத்தோடு சுற்றுலா செல்ல அனுமதித்தல், அவர்களது பணிக்கேற்ற ஊதியத்தை உறுதிப்படுத்துதல், ஆண் காவலர்களுக்கு 8 மணி நேரப் பணி, பெண் காவலர்களுக்கு 6 மணி நேரப் பணி, சுழற்சிமுறையில் பணி என்று பணிநேரத்தை வரையறை செய்தல், பெண் காவலர்களுக்கு முன்னுரிமை அளித்தல், போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் காவலர்களுக்கு பணியிடங்களில் குடிநீர் மற்றும் கழிவறை வசதி ஏற்படுத்தி தருதல் என காவல்துறையைச் சீர்திருத்தி, மறுகட்டமைப்புச் செய்து மக்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையேயான உறவை மேம்படுத்த பல்வேறு செயல்திட்டங்களை தொடர்ந்து முன்வைக்கிறது நாம் தமிழர் கட்சி.

சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டி, மனிதச் சமூகத்தைக் காக்கும் மகத்தான பணிபுரியும் என் பேரன்பிற்கினிய காவல்துறை உறவுகள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த இனிய காவலர் நாள் நல்வாழ்த்துகள்!

https://x.com/Seeman4TN/status/1848385027530236044?t=lrq-iqecvwARfw2wa7lTlQ&s=19

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஇடைநிலை, பட்டதாரி ஆசிரியர் நியமனத்தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிட்டு காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தையும் நிரப்ப வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திகரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2024!