தெய்வத்திருமகனார் நமது ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருநாளையொட்டி, இராமநாதபுரம் மாவட்டம், 30-10-2024 அன்று பசும்பொன்னில் உள்ள ஐயாவின் நினைவிடத்தில் நடைபெற்றுவரும் தேவர் குருபூசையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்று ஐயாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் வணக்கம் மற்றும் புகழ் வணக்கம் செலுத்தினார். கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.