துயர் பகிர்வு: ஆண்டார்கொட்டாரம் ஊராட்சியைச் சேர்ந்த ம.சங்குபால் மறைவு – சீமான் வேதனை

23

நாம் தமிழர் கட்சி – மதுரை மாவட்டம், ஆண்டார்கொட்டாரம் ஊராட்சி இணைச் செயலாளர் அன்புத்தம்பி ம.சங்குபால் அவர்கள் உயிரிழந்த துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

அனைத்து உயிர்களுக்குமான அரசியலை முன்னெடுக்கும்நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் இணைந்து, துடிப்புடன் களப்பணியாற்றிவந்த தம்பி சங்குபால் அவர்களை இழந்திருப்பது மிகுந்த மனத்துயரத்தைத் தருகிறது.
தம்பியை இழந்து வாடும் பெற்றோர்களுக்கும், குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அன்புத்தம்பி ம.சங்குபால் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

https://x.com/Seeman4TN/status/1759787504092250213?s=20

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திLong Live the Farmers’ Protest in Delhi! – Seeman Congratulates Farmers
அடுத்த செய்திமணற்கொள்ளையர்களால் வெட்டிக்கொல்லப்பட்ட கிராம நிர்வாக அலுவலரின் மகன் உரிமையியல் நீதிபதியாகத் தேர்வு! – சீமான் வாழ்த்து