அறிவிப்பு: சென்னை மீனவச் சொந்தங்களின் வாழ்வாதார உரிமைப் போராட்டக்களத்தில் சீமான் பங்கேற்பு

163

அறிவிப்பு:

சென்னையின் பூர்வகுடிகளான மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து, அவர்களை தலைநகரை விட்டே வெளியேற்றும் சூழ்ச்சியாக, சென்னை மெரினா கடற்கரையில் கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான சாலையில் பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் சிறு மீன் கடைகள், உணவகங்களை ஆக்கிரமிப்பு என்றுகூறி அகற்றும் திமுக அரசின் முடிவுக்கு எதிராக அப்பகுதிகளைச் சேர்ந்த மீனவ மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

மீனவச் சொந்தங்களின் வாழ்வாதார உரிமைப் போராட்டத்திற்கு முழுமையாக ஆதரவளித்து, துணை நிற்கும் விதமாக, நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் நாளை 18-04-2023
காலை 11 மணியளவில் நொச்சிக்குப்பம் (கலங்கரை விளக்கம் பின்புறம்) பகுதியில் போராட்டக்களத்திற்கு நேரில் சென்று, பாதிக்கப்பட்ட மீனவ மக்களைச் சந்தித்து, கோரிக்கைகளைக் கேட்டறியவிருக்கிறார்.

இம்மக்கள் சந்திப்பில், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், மீனவச்சொந்தங்களும், பொதுமக்களும் பெருந்திரளாக உடன் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

முந்தைய செய்திஇராணிப்பேட்டை தொகுதி நீர் மோர் வழங்குதல் நிகழ்வு
அடுத்த செய்திஉத்திரமேரூர் தொகுதி ஐயா நம்மாழ்வார் பிறந்த நாள் நிகழ்வு