அறிவிப்பு: சனவரி 25, சீமான் தலைமையில் மொழிப்போர் ஈகியர் நாள் பொதுக்கூட்டம் (புதுக்கோட்டை – திலகர் திடல்)

243

க.எண்: 2023010009
நாள்: 04.01.2023

அறிவிப்பு:
சனவரி 25, மொழிப்போர் ஈகியர் நாள் பொதுக்கூட்டம்
(புதுக்கோட்டை – திலகர் திடல்)

எம்முயிர்த் தமிழ் காக்க; தம்முயிர் ஈந்த ஈகியரின் நினைவைப் போற்றும் மொழிப்போர் ஈகியர் நாளையொட்டி, நாம் தமிழர் கட்சி – ஒருங்கிணைந்த புதுக்கோட்டை மாவட்டம் சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் வருகின்ற 25-01-2023 புதன்கிழமையன்று மாலை 04 மணியளவில் புதுக்கோட்டை திலகர் திடலில் மொழிப்போர் ஈகியர் நாள் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது.

சனவரி 25
மொழிப்போர் ஈகியர் நாள் பொதுக்கூட்டம்
25-01-2023 புதன்கிழமை, மாலை 04 மணியளவில்

நினைவேந்தல் பேருரை:
செந்தமிழன் சீமான்
இடம்:
திலகர் திடல்,
புதுக்கோட்டை நகரம் (வடக்கு ராஜ வீதி)

இம்மாபெரும் பொதுக்கூட்டத்தில் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி, நகரம், வட்டம், பகுதி, ஒன்றிய, கிளை உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் அனைத்து பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பொதுமக்களும் உணர்வெழுச்சியுடன் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

  • தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
    நாம் தமிழர் கட்சி
முந்தைய செய்திகும்பகோணம் சட்டமன்ற தொகுதி – கொள்கை விளக்க பொதுக்கூட்டம்
அடுத்த செய்திஉதகை சட்டமன்ற தொகுதி – கட்சியில் இணையும் விழா