அறிவிப்பு: பாட்டனார் பூலித்தேவன் வீரவணக்க நிகழ்வு மற்றும் தமிழ்த்தேசியப்போராளி தமிழரசன் மற்றும் தங்கை அனிதா நினைவைப் போற்றும் நிகழ்வு

161

க.எண்: 2022080378

நாள்: 30.08.2022

அறிவிப்பு:
பாட்டனார் பூலித்தேவன் வீரவணக்க நிகழ்வு மற்றும்
தமிழ்த்தேசியப்போராளி தமிழரசன் மற்றும் தங்கை அனிதா நினைவைப் போற்றும் நிகழ்வு

வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவன் அவர்களின் 307ஆம் ஆண்டு பிறந்தநாளும், தமிழ்த்தேசியப் போராளி பொன்பரப்பி தமிழரசன் அவர்களின் 35ஆம் ஆண்டு நினைவுநாளும், சமூக நீதிக்கு எதிரான ‘நீட்’ தேர்வுமுறையை ஒழிக்கச் சட்டத்தின் வழிநின்று போராடி, கல்வி உரிமைக்காகத் தன்னுயிர் ஈந்த தங்கை அனிதா அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவுநாளுமான 01-09-2022 வியாழக்கிழமையன்று கட்சித் தலைமை அலுவலகத்தில்  தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் மலர்வணக்க நிகழ்வு நடைபெறவிருக்கின்றது.

தலைமை:

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நிகழ்விடம்: கட்சித் தலைமை அலுவலகம்
இராவணன் குடில், சென்னை

நாள்: 01-09-2022 வியாழக்கிழமை,
காலை 10 மணியளவில்

 

இந்நிகழ்வில் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், மகளிர் பாசறை உள்ளிட்ட அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பொதுமக்களும் உணரவெழுச்சியுடன் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திமன்னார்குடி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திபெரியகுளம் தொகுதி வீரத்தமிழச்சி செங்கொடி வீரவணக்க நிகழ்வு உறுப்பினர் சேர்க்கை முகாம்