தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் நலமாக உள்ளார்!

2064

திருவொற்றியூர், அண்ணாமலை நகர் இரயில்வே கேட் பகுதி மக்களின் குடியிருப்புகள் இடிக்கப்படுவதைக் கண்டித்து, பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்களை நேரில் சந்திக்கச்சென்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நீண்ட நேரமாக  வெயிலில் நின்றுகொண்டே செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தமையாலும், தொடர் அலைச்சல், ஓய்வின்மையாலும் சோர்வுற்றார்.

தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பினார். முழு உடல் பரிசோதனைக்குப் பிறகு வீடு திரும்பினார்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு,
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஅத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்திற்கு வழிவகுக்கும் எரிபொருள் விலை உயர்வு மற்றும் சுங்கச்சாவடி கட்டண உயர்வை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் ! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: வழக்கறிஞர் பாசறை மாநிலப் பொறுப்பாளர்கள் நியமனம்