அறிவிப்பு: மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் (டிசம்பர் 24 – கோயம்புத்தூர் | டிசம்பர் 26 – நாகப்பட்டினம்)

733

க.எண்: 2021120310
நாள்: 20.12.2021

அறிவிப்பு: மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
(டிசம்பர் 24 – கோயம்புத்தூர் | டிசம்பர் 26 – நாகப்பட்டினம்)

20 ஆண்டுகளுக்கும் மேலாகக் கொடுஞ்சிறைவாசம் அனுபவித்து வரும் இசுலாமிய சிறைவாசிகளை மதத்தினைக் காரணமாகக் காட்டி விடுதலை செய்ய மறுக்கும் திமுக அரசின் மதவாதச் செயலைக் கண்டித்தும், 30 ஆண்டுகளைக் கடந்தும் சிறைக்கொட்டடியில் வாடிக்கிடக்கும் ஏழு பேர் விடுதலையைக் கோரியும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைக்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் எதிர்வரும் 24.12.2021 ன்று கோயம்புத்தூரிலும் 26.12.2021 அன்று நாகப்பட்டினத்திலும் நடைபெறவிருக்கின்றது.

24.12.2021
வெள்ளி, மாலை 03 மணியளவில்
கோயம்புத்தூர்
செஞ்சிலுவை சங்கம் முன்பு
26.12.2021
ஞாயிறு, காலை 10 மணியளவில்
நாகப்பட்டினம்
அவுரித்திடல்

நம் உறவுகளின் விடுதலையை வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் இம்மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்களில், கட்சியின் மாநில, மாவட்ட, தொகுதி, நகரம், வட்டம், ஒன்றியம் உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

வீறுகொண்டு வாருங்கள் தமிழர்களே!

நம் உறவுகளின் விடுதலைக்காக இணைந்து குரல் எழுப்புவோம்!

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திபெரம்பலூர் மாவட்டம் – மாவட்ட ஆட்சியரிடம் மனு
அடுத்த செய்திஇலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ள 69 தமிழக மீனவர்களையும் விரைந்து மீட்டெடுக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்