சுற்றறிக்கை: நகர்புற உள்ளாட்சித் தேர்தல் விருப்ப மனு பெறுதல் தொடர்பாக

570

க.எண்: 2020010004

நாள்: 07.01.2020

சுற்றறிக்கை: நகர்புற உள்ளாட்சித் தேர்தல் விருப்ப மனு பெறுதல் தொடர்பாக | நாம் தமிழர் கட்சி

எதிர்வரவிருக்கும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் மற்றும் நிறுத்திவைக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி வழமைப் போல தனித்துப் போட்டியிடவிருக்கிறது. இதற்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்றுவருவதால் கட்சி சார்பில் போட்டியிடக்கூடிய உள்ளாட்சிப் பொறுப்புகளுக்கு கட்சி சார்பாக போட்டியிட விரும்பும் உறவுகள், உள்ளாட்சிப் பொறுப்புகளைக் குறிப்பிட்டு முழுப்பெயர், முகவரி உள்ளிட்ட உரிய தகவல்களுடன் புகைப்படம், வாக்காளர் அடையாள அட்டை நகல், கட்சி உறுப்பினர் அடையாள அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து விருப்ப மனுவைத் தத்தம் தொகுதிச் செயலாளர் / தொகுதித் தலைவரிடம் உடனடியாக வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அவ்வாறு பெறப்படும் விருப்ப மனுக்களை, மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் தொகுதித் தலைவர் / தொகுதிச் செயலாளர் இணைந்து சேகரித்து, எதிர்வரும் 27-01-2020 திங்கட்கிழமைக்குள்ளாக கட்சி தலைமை அலுவலகத்தில் உரிய முறையில் சேர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மாதிரி விருப்ப மனு படிவம் நமது கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (https://www.naamtamilar.org) இருந்து தரவிறக்கம் செய்துகொள்ளவும்.

 

 

 

 

நா.சந்திரசேகரன்

பொதுச்செயலாளர்

முந்தைய செய்திஅறிவிப்பு: தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாள் பொங்கல் விழா – தலைமையகம்
அடுத்த செய்திதஞ்சை பெருவுடையார் கோயில் குடமுழுக்கை தமிழ்முறைப்படி நடத்த வேண்டும் – சீமான் கோரிக்கை