சுற்றறிக்கை: குருதிக்கொடை முகாம்கள் நடத்த திட்டமிடுதல் தொடர்பாக

590

சுற்றறிக்கை: குருதிக்கொடை முகாம்கள் நடத்த திட்டமிடுதல் தொடர்பாக | நாம் தமிழர் கட்சி

தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 65ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் மருத்துவர் பாசறை மற்றும் குருதிக்கொடைப் பாசறை இணைந்து நடத்தும் குருதிக்கொடை முகாம்கள் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் ஆண்டுதோறும் எழுச்சியோடு நடைபெற்றுவருகிறது. அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெவ்வேறு நாட்களில் குருதிக்கொடை முகாம்கள் மிகச்சிறப்பாக உணர்வெழுச்சியோடு நடத்தப்பட்டுவருகிறது.

அவ்வாறு தங்கள் பகுதிகளில் குருதிக்கொடை முகாமை முன்னெடுத்து நடத்தும் பொறுப்பாளர்கள் பின்வரும் தகவல்களை kuruthikodai@naamtamilar.org என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாக தலைமை அலுவலகத்திற்குத் தெரியப்படுத்தவும்.

முகாம் நடைபெறும் நாள், இடம், மாவட்டம், பொறுப்பாளர் மற்றும் முகாம்களில் குருதிக்கொடை வழங்குபவர்களின் பெயர், வயது, குருதிப் பிரிவு மற்றும் தொடர்பு எண்

நாம் தமிழர் கட்சியின் குருதிக்கொடைப் பாசறை சார்பாக குருதிக்கொடையாளர்களுக்கு வழங்கவேண்டிய ‘உயிர்நேய மாண்பாளர்’ சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ள முகாம்களை ஒருங்கிணைக்கும் பொறுப்பாளர்கள் தலைமை அலுவலகத்திற்கு நேரில் அல்லது தொலைபேசி (+044 – 4380 4084) வாயிலாக தொடர்புகொள்ளுங்கள். சான்றிதழ்கள் உங்கள் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

தொடர்புக்கு:
அரிமா மு.ப.செ. நாதன் (+91-7667412345)
மாநிலக் குருதிக்கொடைப் பாசறை ஒருங்கிணைப்பாளர்

குறிப்பு: படிவத்தின் மாதிரி இணைக்கப்பட்டுள்ளது. படிவத்தை நகலெடுத்துக்கொண்டு தகவல்களை உரியமுறையில் நிரப்பி இறுதியாக புகைப்படமாக எடுத்து மின்னஞ்சல் அனுப்பவும்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084

முந்தைய செய்திதமிழ் தெரியாதவர்கள் சிவில் நீதிபதிகளாக ஆகிவிட முடியும் என்பது தமிழ்மொழியை ஒட்டுமொத்தமாகத் தமிழர் நிலத்தில் அழிக்கிற செயல்! – சீமான் கடும் கண்டனம்.
அடுத்த செய்திஎதேச்சதிகாரப்போக்கின் மூலம் மராட்டியத்தில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியிருப்பது மாபெரும் சனநாயகப் படுகொலை! – சீமான் கண்டனம்