தலைமை அறிவிப்பு: காஞ்சி கிழக்கு மண்டலப் பொறுப்பாளர்கள் மாற்றம்  (07-12-2018)

45

தலைமை அறிவிப்பு: காஞ்சி கிழக்கு மண்டலப் பொறுப்பாளர்கள் மாற்றம்  (07-12-2018) | நாம் தமிழர் கட்சி

காஞ்சி கிழக்கு மண்டலம் – கலை இலக்கிய, பண்பாட்டுப் பாசறையின் செயலாளராக இருந்த தே.குரலினியன் (01334228421) அவர்கள், கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி தொடர்ச்சியாகச் செயல்பட்டு வந்தக் காரணத்தினால் கட்சிப் பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்படுகிறார். எனவே இவருடன் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் கட்சித் தொடர்பான எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், அ.இரமேஷ் அமல்ராஜ் (01854417906) அவர்கள் இன்று முதல் (07-12-2018) காஞ்சி கிழக்கு மண்டலம் – கலை இலக்கிய, பண்பாட்டுப் பாசறையின் செயலாளராகவும், இணைச் செயலாளராக பேராசிரியர் கு.வ.பாலசுப்பிரமணியன் (01337591449) அவர்களும் நியமிக்கப்படுகிறார்கள் என்று தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (07-12-2018) அறிவித்துள்ளார்.

இவர்கள் இருவருக்கும் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் (07-12-2018)
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: பல்லாவரம் சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் மாற்றம்  (07-12-2018)