அறிவிப்பு: வீரத்தமிழர் முன்னணியின் முப்பெரும் புகழ்வணக்கப் பெருவிழா – பொதுக்கூட்டம் | சங்கரன்கோவில்

897

அறிவிப்பு: முப்பெரும் புகழ்வணக்கப் பெருவிழா – பொதுக்கூட்டம் | சங்கரன்கோவில் | நாம் தமிழர் கட்சி – வீரத்தமிழர் முன்னணி

பண்பாட்டுப் புரட்சி இல்லாது; அரசியல் புரட்சி வெல்லாது! என்ற தத்துவ முழக்கத்தை முன்னிறுத்தும் நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பாக மண்மீட்புப் போராளிகள் வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவன், விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் மற்றும் வீரப்பெரும்பாட்டன் அழுகு முத்துக்கோன் மூவரின் பெரும்புகழ்ப் போற்றும் முப்பெரும் புகழ்வணக்கப் பெருவிழாப் பொதுக்கூட்டம் வருகின்ற 22-09-2018 சனிக்கிழமை அன்று திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில், வடக்கு இரத வீதி மணிக்கிரீவன் திடலில் நடைபெறவிருக்கின்றது.

இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பெருவிழாப் பேருரையாற்றுகிறார்.

அவ்வயம் நாம் தமிழர் கட்சியின் அனைத்துநிலை பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்று விழாவைச் சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கிறோம்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திசமூகநீதிப் போராளி இமானுவேல் சேகரன் நினைவுநாள் மலர்வணக்கம் | பரமக்குடி தொகுதி
அடுத்த செய்திசெங்கோட்டையில் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்