அறிவிப்பு: ஐபில் போட்டியின்போது காலணி வீசி எதிர்ப்பு – சிறைசென்ற 08 பேர் பிணையில் விடுதலை

55

அறிவிப்பு: காவிரி மேலாண்மை வாரியம் அமையும்வரை ஐபில் போட்டிகள் புறக்கணிப்பு – விளையாட்டுத் திடலினுள் காலணி வீசியதற்காக கைது செய்யப்பட்டவர்களில் 08 பேர் பிணையில் இன்று விடுதலை | நாம் தமிழர் கட்சி

கடந்த 10-04-2018 அன்று சென்னை, சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஐபில் போட்டியின் போது பார்வையாளராக சென்று விளையாட்டுத் திடலினுள் காலணிகள் வீசியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை ஐபில் போட்டிகளைப் புறக்கணிக்குமாறு முழக்கங்கள் எழுப்பி எதிர்ப்பு தெரிவித்ததற்காக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதில் 08 பேருக்கு நேற்று (19-04-2018) பிணை கிடைத்துள்ளது.

1. பிரபாகரன் காமராஜ்
2. பொன்னுவேல்
3. மகேந்திரன்
4. ராஜ்குமார்
5. சுகுமார்
6. ஆல்பர்ட்
7. ஏகாம்பரம்
8. மார்டின்

மேலும் ஐபில் போராட்டத்தில் பங்கேற்றதற்காக கைது செய்யப்பட்ட (14-04-2018) ஸ்டாலின் அவர்களுக்கும் நேற்று (19-04-2018) பிணை கிடைத்துள்ளது. எஞ்சியவர்களைப் பிணையில் எடுக்க “நாம் தமிழர் – வழக்கறிஞர் பாசறை” அயராது பாடுபட்டுக்கொண்டிருக்கிறது. விரைவில் அனைவரையும் மீட்போம்.

பிணை கிடைத்துள்ள 09 பேரும் இன்று (20-04-2018) மாலை 04:30 மணியளவில் விடுதலையாகிறார்கள்.

அன்னைக் காவிரிக்காகப் போராடி சிறைச்சென்ற உறவுகளை வரவேற்க தாய்த்தமிழ் உறவுகள் அனைவரும் புழல் சிறைச்சாலை அருகே கூடுவோம்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திகாவிரிப் போராட்டம்: ஐபில் போட்டி மைதானத்திற்குள் காலணி வீசியதற்காக கைது செய்யப்பட்டவர்களில் 08 பேர் பிணையில் விடுதலை
அடுத்த செய்திகாவிரிப் போராட்டம்: மன்சூர் அலிகான் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சி மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் 18 பேர் பிணையில் விடுதலை