பத்திரப்பதிவு குறித்து உயர்நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடையை நீக்ககோரி நடைபெற்ற கண்டனப் பேரணியில் சீமான்

26

பட்டாநிலம், கிராமநத்தம் இடங்களைப் பத்திரப்பதிவு செய்யக்கூடாது என்று உயர்நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடையை நீக்ககோரி நடைபெற்ற கண்டனப் பேரணியை சீமான் தொடங்கிவைத்தார்.

“இந்திய தேசிய ரியல்எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத்தரகர்கள் நலச்சங்கம்” சார்பில் பட்டாநிலம், கிராமநத்தம் இடங்களைப் பத்திரப்பதிவு செய்யக்கூடாது என்று உயர்நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடையை நீக்ககோரி, இன்று (19-10-2016) மாலை 3 மணியளவில் சென்னை, எழும்பூர், இராசரத்தினம் விளையாட்டு அரங்கத்திலிருந்து தொடங்கிய மாபெரும் கண்டனப் பேரணியை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் கொடியசைத்து துவக்கிவைத்து, கண்டன உரையாற்றினார்.

முந்தைய செய்திதொடர்வண்டி மறியல் போராட்டம் – கும்பகோணம்
அடுத்த செய்திதமிழகத்திற்கு வழங்கும் அரிசியின் விலையை உயர்த்திப் பழிவாங்குவதா? – மத்திய அரசுக்கு சீமான் கண்டனம்!