நாம்தமிழர் கட்சியின் சார்பாக நடக்கும் கலந்தாய்வுக்கூட்டம், பொதுக்கூட்டம், அரங்கக்கூட்டம் எதுவாக இருந்தாலும், முதலில் அகவணக்கம், இரண்டாவது வீரவணக்கம், முன்றாவது உறுதிமொழி எடுத்த பின்னர் நிகழ்ச்சியைத் தொடங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் .
அகவணக்கம்
தாயக விடுதலைக்குக் களமாடி உயிர் நீத்த பொதுமக்களுக்கும் எம்
தாய்த்தமிழ் உறவுகளுக்கும் ஒரு நிமிடம் அகவணக்கம்.
வீரவணக்கம்
நம் மொழி காக்க, நம் இனம் காக்க, நம் மண்காக்க, நம் மானம் காக்க
இன்னுயிர் ஈந்த மாவீரர் அனைவருக்கும் வீரவணக்கம் ! வீரவணக்கம் !!
உறுதிமொழி
மொழியாகி, எங்கள் மூச்சாகி, நாளை முடி சூடும் எம் தமிழ் மீது உறுதி!
வழிகாட்டி எம்மை உருவாக்கும் தமிழர் வரலாற்றின் மீதும் உறுதி!
விழிமூடி துயில்கின்ற வீர வேங்கைகள் மீதும் உறுதி!
இனிமேலும் ஓயோம் !
இழிவாக வாழோம் ! உறுதி! உறுதி!!
வென்றெடுப்போம் தமிழர் உரிமைகளை கட்டி எழுப்புவோம் தமிழர்
உலகத்தை !வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர்!
நாம்தமிழர் ! நாம்தமிழர் !! நாம்தமிழர்!!!
இப்படிக்கு
நாம் தமிழர் கட்சி தலைமை நிர்வாகம்