சட்டமன்றத் தேர்தல்-2021 வேட்பாளர்கள் தேர்வு மற்றும் களப்பணிகள் குறித்து அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுடன் கலந்தாய்வு மேற்கொள்வதற்காக சனவரி 22 முதல் 31 வரை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மண்டலவாரியாக தஞ்சாவூர், திருநெல்வேலி, மதுரை, விழுப்புரம், சேலம், கோயம்புத்தூர், வேலூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்றுவரும் கலந்தாய்வுக் கூட்டங்களில் பங்கேற்று வருகிறார்.
23-01-2021 அன்று மாலை 4 மணியளவில் மதுரை ஒத்தக்கடை, மேலூர் சாலையில் அமைந்துள்ள ஆர்.கே.திருமண மண்டபத்தில் நடைபெறவிருக்கும் திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார்.
செய்தியாளர் சந்திப்பு
வெல்லப்போறான் விவசாயி!
சட்டமன்றத் தேர்தல்-2021 குறித்து மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டக் களப்போராளிகளுடன் கலந்தாய்வு.
23-01-2021 | மதுரை#VellaporanVivasayi | #TNElections2021 | #NTK4TamilNadu pic.twitter.com/N48iXGZRXI
— சீமான் (@SeemanOfficial) January 24, 2021